Tuesday, November 9, 2010

குலதெய்வத்திடம் கேளுங்கள்


* எல்லா சாஸ்திரங்களும் உண்மையைப் பற்றி எடுத்துச் சொன்னாலும்,
எல்லாருக்கும் எப்போதும் ஒரே சாஸ்திரம் ஒத்துவராது. இந்த உலகமே பொய் என்று கூறுவது சந்நியாசிகளுக்கு மட்டும் தான் பொருந்தும்.

* நமக்கு இவ்வுலகத்தில் வேண்டியவை நீண்ட வயது, நோயின்மை, அறிவு, செல்வம் என்ற நான்குமாகும். இவற்றைத் தந்தருளும்படி அவரவர்
குலதெய்வத்திடம் மன்றாட வேண்டும்.


* எல்லா தெய்வங்களும் ஒன்று தான். அறம், பொருள், இன்பம் ஆகிய மூன்றிலும் தெய்வ ஒளி உண்டாக வேண்டும். தெய்வத்தின் ஒளி கண்டால் நான்காம் நிலையாகிய வீடுபேறு தானாகவே கிடைக்கும்.

* மனம் என்னும் வீட்டின் பூட்டப்பட்ட கதவுகளை "அறிவு' என்னும் கைகளால் திறந்திடுங்கள். கையால் துடைத்து தூய்மையாக்குவது போல, மனவீட்டை "உண்மை' என்னும் கைகளால் துடைத்து தூய்மையாக்குங்கள்.

* தாயாய் விளங்கும் பராசக்தியின் இருபாதங்களையும், தர்மத்தையும் கருத்தில் கொண்டு உழைப்பது தான் நம் கடமையாக இருக்க வேண்டும்.

- பாரதியார்