
* மனிதனின் மனம் கடுகுப் பொட்டலம் போன்றது. அது கிழிந்து, நாலாப் பக்கங்களிலும் ஓடிவிட்டால் அதை ஒன்று சேர்ப்பது சிரமம். அதுபோல் மனம் பல வழிகளில் சென்று, உலக விஷயங்களோடு ஈடுபட்டிருக்கும் போது அதைக் குவித்து ஒருமுகப்படுத்துவதும் சுலபமல்ல.
* கடவுளைத் தேடுபவன் அவரை அடைகிறான், செல்வத்தைத் தேடுபவன் அவற்றை அடைகிறான். நீ எதைத் தேடுகிறாயோ அதையே அடைவாய்.
* "நான்' என்னும் அகங்காரம் அழியும்போது கடவுள் தோன்றுகிறார். ஒருவனது அகங்காரம் அவனது உடல் இருக்கும் வரை அவனைவிட்டு முற்றிலும் நீங்குவதில்லை.
* ஒளியை உணர்பவன் இருளையும் உணர்கிறான். பாவம் தெரிந்தவனுக்கு புண்ணியமும் தெரியும்; குணத்தை அறிந்தவன், குற்றத்தைப் பற்றியும் அறிந்திருப்பான்.
- ராமகிருஷ்ணர்