Thursday, September 8, 2011

நலன் நல்கும் தக்காளி

நலன் நல்கும் தக்காளி

நலன்கள் பல நல்கும் தக்காளி தக்காளி செலானேசியே  (Solanaceae)  குடும்பத்தைச் சேர்ந்த செடியினமாகும்.  இதன் அறிவியற் பெயர் Solanum Lycopersium என்பதாகும்.  இது ஓராண்டுத் தாவரமாகும்.  ஒன்று தொடக்கம் மூன்று மீற்றர் வரை வளரக்கூடியது. தக்காளியின் பிறப்பிடம் தென் அமெரிக்கா.

இது சர் வால்டர் ராலே என்பவரால் முதன்முதலில் ஐரோப்பாவில் அறிமுகப்டுத்தப்பட்டது. தக்காளியில் காணப்படும் லைக்கோப்பின் எனும் பொருளே இதன் நிறத்திற்கு காரணமாகிறது.  இந்நிறப்பொருளில் புற்றுநோயைத் தடுக்கும் சக்தியுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. மேலும் ஆண்களின் விந்தணு வீரியத்திற்கும் இது காரணமாவதாக சமீப கால ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. மேலும் கருஞ்சிவப்பு நிறத்தக்காளி ஆயுளைக் கூட்டுவதாகவும் அறியப்படுகிறது.  தக்காளியில் தண்ணீர் – 94.37மூ,  புரொட்டீன் – 0.9மூ,  கொலஸ்ட்ரால்- 0.4மூ,  கார்போ ஹைட்ரேட்0.9மூ,  மினரல்ஸ்-0.9மூ,  விட்டமின் 'யு'- 100ஐரு ஃ 100 கி,  விட்டமின் - C,  டீ1, டீ2, கால்சியம்,  பாஸ்பரஸ்,  மாக்னீசியும் மற்றும் பல உள்ளன. காய் கறிகளில் மிகவும் எளிதிலும் விரைவாகவும் ஜீரணமாகக் கூடியது தக்காளி உடம்புக்கு ஆரோக்கியம் அளிக்கும் மூன்று விதமான புளிப்புகளும் தக்காளிப் பழத்தில் இருக்கின்றன.மற்றக் காய்களில் சிலவற்றில் ஒன்று அதிகமாகவும் மற்ற இரண்டும் குறைவாகவும் இருக்கும். மற்றும் சிலவற்றில் இரண்டு அதிகமாகவும் ஒன்று குறைவாகவும் இருக்கும். ஆனால் தக்காளிப் பழத்தில் மூன்றும் சரியான அளவில் இருக்கின்றன.இதனால் தான் ஏழைகளின் அப்பிள் என்றும் பெயர் பெறுகின்றது. முதலாவது,  ஆப்பிள் பழத்தில் இருக்கும் ஃபாலிக் அமிலம். இது பழத்துக்குப் புளிப்புத் தன்மை தருகிறது.இரண்டாவது எலுமிச்சம் பழம்,  சாத்துக்குடி,  நாரத்தை முதலியவற்றில் இருக்கும் 'சிட்ரிக்' அமிலம் இதன் புளிப்பு கிருமிகளைக் கொல்லக் கூடியது.மூன்றாவது ஃபாஸ்ப்போரிக் அமிலம். இது நரம்பு,  நாடி சம்பந்தமான நோய்களுக்கு மிகவும் நல்லது. இது உடலில் சேரும் கிருமிகளைக் கொன்று,  அவை சுரக்கும் அமிலங்களைச் சக்தியற்றவையாக்குகிறது. தவிர பலவீனம்,  சோம்பல் இவற்றை நீக்கிச் சுறுசுறுப்பைத் தருகிறது. இருதய சம்பந்தமான நோய்களுக்கு இது ஏற்றது.  தக்காளியில் ஒரு விதமான ரசம் இருக்கிறது.  அது உடலில் கட்டியிருக்கும் கபத்தைக் கரைத்து விடுகிறது. எனவே எளிதில் சளி வெளிவந்து விடுகிறது. மலச்சிக்கலை நீக்கவும் மற்ற உணவுப் பதார்த்தங்களை விடத் தக்காளியில் அதிக அளவில் மக்னீசியம் இருக்கிறது.  இதில் மக்னீசியத்தைத் தவிர இரும்பு,  பாஸ்பரஸ்,  பொட்டாசியம்,  செம்பு,  சிறிது கல்சியம் ஆகியவையும் இருக்கின்றன. இது சுமார் ஒரு மணி நேரத்தில் ஜீரணமாகிவிடும். அதனால் ஜீரண சக்தி குறைவாயுள்ளவர்களுக்குத் தக்காளி ரசம் மிகவும் ஏற்றது. 

குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் நல்ல புஷ்டியான ஒரு சிறந்த உணவு.  தக்காளியிலுள்ள மக்னீசியம் எலும்புகளையும் பற்களையும் உறுதிப்படுத்துகிறது. மேலும் என்புருக்கி நோயையும் கட்டுப்படுத்துகின்றது. கல்சியத்தினால் எலும்பு வளர்ச்சி ஏற்பட்டாலும் மக்னிசியம் சிமெண்டைப் போல் எலும்புகளை ஒன்றோடு ஒன்று இணைக்கிறது.  எலும்புகளும் உறுதிப்பட்டு ஒழுங்காக அமைகின்றன.  குழந்தைகளும் பெரியவர்களும் மக்னீசியம் உள்ள தக்காளியோடு கூட,  கல்சியம் உள்ள பால் தயிர் முதலியன உட்கொள்வது மிகவும் அவசியம். அதனால் தக்காளி தயிர்ப்பச்சடி செய்து அவ்வப்போது உண்டு வரலாம். வைட்டமின் 'சி' குறைவு காரணமாக உடலில் அங்கங்கே வீக்கம் ஏற்படும். சக்தியும் குறையும்,  பல்லும் ஈறும் பலவீனப்படும். உடம்பு வளராமல் குள்ளமாகவே மனிதன் நின்றுவிடுவான். இதையெல்லாம் போக்கக் கூடிய விற்றமின்மின் 'சி' தக்காளியில் அதிக அளவில் கிடைக்கிறது. மற்றும் விற்றமின்மின் 'பி'யும் 'சி'யுங்கூட இதில் இருக்கின்றன. சூரியனிலிருந்து கிடைக்கும் விற்றமின்மின் 'டி'கூட இருக்கிறது.  இதில் குறைவான கார்போஹைட்ரேட் இருப்பதால் உடல் எடை குறைப்பிற்கும், நீரிழிவு நோயாளிகளுக்கும் மிக சிறந்ததாகும். மேலும் குடலை சுத்தப்படுத்தும்,  மலச்சிக்கல்,  ஜீரணம்,  வாய்வு ஆகியவற்றையும் நீக்கும். கல்லீரல் நோய்க்கும்,  இரத்த சோகைக்கும் மிக சிறந்த பானமாகும் இதை காய்ச்சலின் போதும் குடிக்கலாம்

 

நன்றி - tconews.com